இந்தியா

கட்சி ஊழியரை திருமணம் செய்த ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ.- வியந்துபோன உள்ளூர் மக்கள்

Published On 2022-10-13 12:00 IST   |   Update On 2022-10-13 12:00:00 IST
  • 28 வயதான நரீந்தர்கவுர்பராஜ் எம்.எல்.ஏ. பாட்டியாலாயாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. முடித்துள்ளார்.
  • ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த மந்தீப்சிங் என்ற ஊழியரை திருமணம் செய்து கொண்டார்.

சங்ரூர்:

பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த்மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள சங்ரூர் தொகுதி பெண் எம்.எல்.ஏ.வாக நரீந்தர்கவுர்பரஜ் உள்ளார்.

இவர் ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த மந்தீப்சிங் என்ற ஊழியரை திருமணம் செய்து கொண்டார். ரோர்வால் கிராமத்தில் உள்ள குருத்வாரில் உறவினர்கள் முன்னிலையில் மிக எளிமையாக இந்த திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு முதல்-மந்திரியின் மனைவி வந்திருந்தார். 28 வயதான நரீந்தர்கவுர்பராஜ் எம்.எல்.ஏ. பாட்டியாலாயாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. முடித்துள்ளார். எளிமையாக நடந்த திருமணத்தை இப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

Tags:    

Similar News