இந்தியா

நீதிமன்றம் உத்தரவு எதிரொலி: ஹூரியத் அலுவலகத்துக்கு சீல் வைப்பு- என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2023-01-29 15:51 IST   |   Update On 2023-01-29 15:51:00 IST
  • ஹூரியத் மாநாட்டு அலுவலகத்துக்கு இன்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சென்றனர்.
  • ஹூரியத் மாநாட்டின் அலுவலகத்தை சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்ய உத்தரவு.

காஷ்மீரில் உள்ள ஹூரியத் மாநாட்டு கட்சி தலைவர் நயீம் கான் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கடந்த 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே தீவிரவாதத்துக்கு நிதி உதவி செய்த வழக்கில் ஸ்ரீநகரின் ராஜ்பாக்கில் உள்ள அனைத்து கட்சி ஹூரியத் மாநாட்டின் அலுவலகத்தை சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்ய டெல்லி கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

இதையடுத்து ஹூரியத் மாநாட்டு அலுவலகத்துக்கு இன்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சென்றனர். அங்கு அலுவலகத்தை சீல் வைத்து அதிரடியாக நடவடிக்கை எடுத்தனர்.

Tags:    

Similar News