இந்தியா

காவிரி ஒழுங்காற்று குழு நாளை கூடுகிறது

Published On 2023-10-10 13:01 IST   |   Update On 2023-10-10 13:28:00 IST
  • 13 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட தமிழகம் கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளது.
  • காணொலி மூலம் நடைபெறும் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநில அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.

புதுடெல்லி:

காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் 12-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் இந்த கூட்டம் ஒருநாள் முன்னதாக நாளையே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

13 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட தமிழகம் கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளது. காணொலி மூலம் நடைபெறும் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநில அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.

Tags:    

Similar News