இந்தியா

சைக்கோவாக மாறிய தொழிலாளி 3 பெண்களை கொடூரமாக கொன்றார்

Published On 2022-08-19 06:38 GMT   |   Update On 2022-08-19 06:38 GMT
  • கடந்த மாதம் 7-ந் தேதி பெண்டுருத்தி பிருந்தாவனம் பகுதியில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே இரவு நல்லம்மா (50), அவரது மகன் வரலையா (19) ஆகியோர் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தனர்.
  • ராம்பாபு இரும்பு ராடால் இருவரையும் சரமாரியாக தாக்கினார். இதில் அவர்கள் காயமடைந்தனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், பெண்டுருத்தி பகுதியில் ஒரே வாரத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்ட 2 பெண்கள், 1 ஆண் கொலை செய்யப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கொலையாளி யார் எதற்காக கொலை செய்தார் என கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர். கொலை நடந்த இடங்களில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் கொலையாளியை கண்டுபிடிக்க சிரமம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு முட்புதரில் பதுங்கியிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் அங்கப்பள்ளி மாவட்டம் தர்மசாஸ்திரம் பகுதியை சேர்ந்த சந்தக ராம்பாபு (வயது 49) என தெரியவந்தது. இவரது பெற்றோர் இளம் வயதிலேயே இறந்து விட்டதால் 18 வயதில் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். பின்னர் தனது மனைவியுடன் ராஜ் முந்திரி சென்ற சந்தக ராம்பாபு அங்கு கொத்தனார் வேலை செய்து வந்தார்.

மேலும் ஆட்டோ ஓட்டி வந்தார். இதில் போதுமான வருமானம் கிடைக்காததால் கடந்த 2006-ல் ஐதராபாத் வந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்தார்.

இதையடுத்து கடந்த 2013ல் விசாகப்பட்டினத்திற்கு வந்து அங்குள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஏஜெண்டாக பணிபுரிந்தார். இந்த நிலையில் 2016-ல் மீண்டும் ஐதராபாத் வந்து ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு 27 வயதில் மகனும், 26 வயதில் மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் வேலையில் இருந்து வீட்டிற்கு சென்றபோது மனைவி வேறு ஒருவருடன் படுக்கையில் உல்லாசமாக இருப்பதை சந்தக ராம்பாபு நேரில் பார்த்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் மனைவியை விவாகரத்து செய்தார். மனைவி ஏமாற்றியதால் தனிமையில் இருந்த ராம்பாபுவுக்கு பெண்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு சைக்கோ நிலைக்கு சென்றார். பெண்களை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

கடந்த மாதம் 7-ந் தேதி பெண்டுருத்தி பிருந்தாவனம் பகுதியில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே இரவு நல்லம்மா (50), அவரது மகன் வரலையா (19) ஆகியோர் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தனர்.

அங்கு வந்த ராம்பாபு இரும்பு ராடால் இருவரையும் சரமாரியாக தாக்கினார். இதில் அவர்கள் காயமடைந்தனர். வலியால் இருவரும் அலறி துடித்ததால் அருகில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். இதனை கண்ட ராம்பாபு அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதேபோல் கடந்த 6-ந் தேதி சப்தகிரி நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்யும் சுதாரி அப்பாராவ் (72). மனைவி சுதாரி லட்சுமியை (62) இரும்புராடால் தாக்கி கொலை செய்தார். அப்பாராவ் தடுக்க முயன்றதால் அவரையும் அடித்து கொலை செய்தார்.

மேலும் கடந்த 14-ந்தேதி சுஜாதா நகரில் அப்பிக்கொண்ட பகுதியில் கட்டுமான தொழிலாளி லட்சுமி என்பவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத பெண்ணை கொலை செய்த போது போலீசாரிடம் சிக்கினார்.

சைக்கோவாக மாறி பெண்களை கொலை செய்து வந்த தொழிலாளியால் ஆந்திராவில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

Tags:    

Similar News