இந்தியா

ரெப்போ வங்கி கடனுக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்வு

Published On 2022-06-08 05:35 GMT   |   Update On 2022-06-08 05:35 GMT
  • பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வட்டி விகிதத்தை 4.9 சதவீதமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
  • இந்தியப் பொருளாதாரம் நிலையாக இருக்கிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்ந்துள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் 4.90 சதவீதமாக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் நடந்த போரால் உலகளாவிய அளவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வட்டி விகிதத்தை 4.9 சதவீதமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்தியப் பொருளாதாரம் நிலையாக இருக்கிறது. அதன் வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி உறுதுணையாக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News