இந்தியா

வாரணாசியில் ரூ.645 கோடி செலவில் ரோப் கார் திட்டம்- பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்

Published On 2023-03-24 06:07 GMT   |   Update On 2023-03-24 06:07 GMT
  • வாரணாசியில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 59 புதிய குடிநீர் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.
  • நமாமி கங்கா திட்டத்தின் கீழ் பகவான்பூரில் ரூ.300 கோடியில் கட்டப்படும் 55 கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

வாரணாசி:

பிரதமர் மோடி அவரது சொந்த தொகுதியான வாரணாசியில் இன்று சுற்றுப்பயணம் செய்கிறார்.

வாரணாசியில் இன்று மத்திய சுகாதாரதுறை சார்பில் உலக காசா நோய் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

அப்போது காசா நோயை கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கை எடுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விருது வழங்குகிறார். தேசிய காசா நோய் ஒழிப்பு நடவடிக்கை குறித்தும், இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. இதில் 30 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.

மேலும் வாரணாசியில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக வாரணாசி காண்ட் நிலையத்தில் இருந்து கோடோவ்லியா வரையிலான 3.75 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரோப் காரில் சுற்றுலா பயணிகள் சென்று வரலாம்.

இதற்காக வாரணாசி கோடோவ்லியா இடையே 5 நிலையங்கள் அமைக்கப்படுகிறது. ரூ.645 கோடி செலவில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கும் பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும் வாரணாசியில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 59 புதிய குடிநீர் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். இதுதவிர கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் சிகாரா ஸ்டேடியத்தில் 2-வது மற்றும் 3-வது ஸ்டேடியம் கட்டுமான பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.

நமாமி கங்கா திட்டத்தின் கீழ் பகவான்பூரில் ரூ.300 கோடியில் கட்டப்படும் 55 கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கும் பிரதமர்மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

வாரணாசியில் ரூ.1780 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி அங்குள்ள சமஸ்கிருத பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறுகிறது.

Tags:    

Similar News