இந்தியா
பெங்களூரு கூட்ட நெரிசல் உயிரிழப்பு- பிரதமர் மோடி இரங்கல்
- விபத்து மனதை உடைக்கும் அளவிற்கு மிகவும் வேதனையளிக்கிறது.
- காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பெங்களூருவில் நடந்த விபத்து மனதை உடைக்கும் அளவிற்கு மிகவும் வேதனையளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.