இந்தியா
ராஜஸ்தானில் பயணிகள் ரெயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டன
- ராஜஸ்தானில் சூரியநகரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயில் தடம் புரண்டது.
- இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் பாலி அருகே சூரியநகரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயிலின் எட்டு பெட்டிகள் இன்று அதிகாலை தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. சூரியநகரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயில் பாந்த்ரா முனையத்திலிருந்து ஜோத்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில், அதிகாலை 3.27 மணியளவில் ஜோத்பூர் மண்டலத்தின் ராஜ்கியவாஸ்-போமத்ரா பிரிவுக்கு இடையே ரெயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. விபத்து நிவாரண ரெயில் அனுப்பப்பட்டுள்ளது என வடமேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.