இந்தியா

நம்மிடம் மிதக்கும் F-35: கப்பல் அர்ப்பணிப்பு விழாவில் அமெரிக்க போர் விமானத்தை குறிப்பிட்ட ராஜ்நாத் சிங்

Published On 2025-08-26 20:36 IST   |   Update On 2025-08-26 20:36:00 IST
  • ஐஎன்​எஸ் உதயகிரி, ஐஎன்​எஸ் ஹிம​கிரி என்ற இரு போர்க்​கப்​பல்​கள் இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன.
  • பிரம்​மோஸ் ஏவு​கணை​கள், பரக் ஏவு​கணை​கள், 76 எம்​எம் துப்​பாக்​கி​கள் பொருத்த போர்க்கப்பல் ஆகும்.

ஐஎன்எஸ் உதயகிரி, ஐஎன்எஸ் ஹிமகிரி ஆகிய இரண்டு போர்க்கப்பல்கள் இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதற்கான விழா விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

விழாவில் பேசிய அவர், அமெரிக்கா வைத்திருக்கும் F-35 என அதிநவீன போர் விமானத்தை குறிப்பிட்டார். அமெரிக்கா வானத்தில் பறக்கும் F-35 போர் விமானத்தை கொண்டுள்ளது. இந்தியா தண்ணீரில் மிதக்கும் F-35-ஐ தற்போது பெற்றுள்ளது எனக் குறிப்பிட்டார்.

F-35 போர் விமானம் அதிவேகமாகவும், எதிரிகளின் ரேடாரில் தென்படாமலும் எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்கி வல்லமை கொண்டவையாகும்.

ஐஎன்எஸ் உதயகிரி, ஐஎன்எஸ் ஹிமகிரி என்ற இரு போர்க்கப்பல்கள் இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன. இந்திய கடற்படையில் 135-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் உள்ளன. இதில் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகியவை விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் ஆகும். 20 நீர்மூழ்கிகளும் கடற்படையில் உள்ளன. வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்திய போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 160 ஆகவும், 2035-ம்ஆண்டில் 200 ஆகவும் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக உள்நாட்டிலேயே போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 'புராஜக்ட் 17ஏ' என்ற திட்டத்தின் அடிப்படையில் சிறிய ரகத்தை சேர்ந்த 7 போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இந்த போர்க்கப்பல்களுக்கு நீலகிரி, ஹிமகிரி, தாராகிரி, உதயகிரி, துனாகிரி, விருதகிரி, மகேந்திரகிரி என்று இந்திய மலைகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

'புராஜக்ட் 17ஏ' திட்டத்தின்படி ஐஎன்எஸ் நீலகிரி போர்க்கப்பல் கடந்த ஜனவரியில் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற விழாவில் ஐஎன்எஸ் உதயகிரி, ஐஎன்எஸ் ஹிம்கிரி ஆகிய போர்க்கப்பல்கள் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன.

இரு போர்க்கப்பல்களும் தலா 488 அடி நீளம், 58 அடி அகலம் கொண்டதாகும். இவற்றின் எடை 6,670 டன் ஆகும். இந்த போர்க்கப்பல்களில் பிரம்மோஸ் ஏவுகணைகள், பரக் ஏவுகணைகள், 76 எம்எம் துப்பாக்கிகள், நீர்மூழ்கிகளை அழிக்கும் அதிநவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த ஆயுதங்கள் மூலம் எதிரிகளின் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள், எதிரிகளின் கடற்படைத் தளங்களை மிகத் துல்லியமாக தாக்கி அழிக்க முடியும்.

Tags:    

Similar News