இந்தியா

பழைய, புதிய வரி விதிப்பு முறைகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்: மத்திய நிதி அமைச்சகம்

Published On 2024-04-02 08:11 GMT   |   Update On 2024-04-02 10:29 GMT
  • 2024-25-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் வரை, புதிய வரி விதிப்பு முறையில் இருந்து விலகும் வாய்ப்பு வரி செலுத்துவோருக்கு உள்ளது.
  • புதிய வரி விதிப்பு முறையில் வரி விகிதங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைவாக உள்ளன.

புதுடெல்லி:

மத்திய நிதி அமைச்சகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

புதிய வரி விதிப்பு முறை தொடர்பாக சில சமூக ஊடகத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவது கவனத்துக்கு வந்துள்ளது. உண்மையில் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய வரி விதிப்பு முறையில் புதிதாக எந்த மாற்றமும் இல்லை.

தங்களுக்கு பழைய வரி விதிப்பு முறை பயனளிக்குமா அல்லது புதிய வரி விதிப்பு முறை பயனளிக்குமா? என்பதை சிந்தித்து இரண்டில் ஏதேனும் ஒரு முறையை வரி செலுத்துவோர் தேர்வு செய்யலாம்.

2024-25-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் வரை, புதிய வரி விதிப்பு முறையில் இருந்து விலகும் வாய்ப்பு வரி செலுத்துவோருக்கு உள்ளது. வணிக வருமானம் எதுவும் இல்லாத தகுதியான நபர்கள், ஒவ்வொரு நிதியாண்டிலும் தங்களுக்கு உகந்த வரி விதிப்பு முறையை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். இதன் மூலம் ஒரு நிதியாண்டில் புதிய வரி விதிப்பு முறையையும், மற்றொரு நிதியாண்டில் பழைய வரி விதிப்பு முறையையும் வரி செலுத்துவோர் தேர்வு செய்ய முடியும்.

புதிய வரி விதிப்பு முறையில் வரி விகிதங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைவாக உள்ளன. எனினும் ஊதியத்தில் இருந்து நிலையாக பிடித்தம் செய்யப்படும் ரூ.50,000 குடும்ப ஓய்வூதியத்தில் இருந்து நிலையாக பிடித்தம் செய்யப்படும். ரூ.15,000-ஐ தவிர பழைய வரி விதிப்பு முறையில் உள்ள பிற வரி விலக்குகள் மற்றும் பிடித்தங்களின் பலன்கள் புதிய வரி விதிப்பு முறையில் இல்லை.

புதிய வரி விதிப்பு முறையின்படி, ஆண்டுதோறும் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் வருமானம் ஈட்டுவோர் தங்கள் வருமானத்தில் 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News