தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிந்த போது மயங்கிய நிதின் கட்கரி: தலைவர்கள், தொண்டர்கள் அதிர்ச்சி
- ஏக்நாத் ஷிண்டே கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
- மயங்கிய நிலையில் கட்கரியை மற்ற தலைவர்கள் தாங்கியபடி அழைத்துச் சென்றனர்.
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் நிதின் கட்கரி. இவர் மத்திய அமைச்சராகவும் இருந்து வருகிறார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இவர் மகாராஷ்டிரா மாநிலம் யவாத்மல் என்ற இடத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி வேட்பாளருர் ராஜஸ்ரீ பாட்டிலுக்கு ஆதரவாக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தது. பேசிக்கொண்டிருந்தபோதே திடீரென மயங்கினார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தலைவர்கள் அவரை தூக்கிக்கொண்டு சென்றனர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியேனதால் தலைவர்களும், தொண்டர்கள் நிதின் கட்கரிக்கு என்ன ஆனதோ, என கவலை அடைந்தனர்.
ஆனால், மயக்க நிலைக்கு சென்ற நிதின் கட்கரி முறையாக சிகிச்சை பெற்று, பின்னர் மேடைக்கு வந்து தனது பேச்சை தொடர்ந்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக அவர் மயங்கிய நிலைக்கு சென்ற வீடியோ எக்ஸ் பக்கத்தில் பரவத் தொடங்கியுள்ளது.
நிதின் கட்கரி 2014 மற்றும் 2019-ல் நாக்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.