இந்தியா

மீரட் நகரில் நகை பறித்த திருடர்களை எதிர்த்து தைரியமாக போராடிய இளம்பெண்

Published On 2022-12-12 06:56 GMT   |   Update On 2022-12-12 06:56 GMT
  • பைக்கில் ஏறி தப்பிச் செல்ல முயன்ற திருடர்களை இழுத்து பைக்கோடு கீழே தள்ளிவிட்டார்.
  • திருடர்களுடன் போராடும்போது பதிவான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

மீரட்:

உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் செயின் பறித்த திருடர்களுடன் இளம்பெண் மற்றும் அவரது பாட்டி ஆகியோர் தைரியமாக போராடியது அனைவராலும் பாராட்டப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு செயின் திருடர்கள், இளம்பெண்ணிடம் இருந்து கம்மலை பறித்துக்கொண்டு தப்ப முயன்றனர். அப்போது துணிச்சலுடன் செயல்பட்ட இளம்பெண், அந்த திருடர்களை எதிர்த்து போராடினார்.

பைக்கில் ஏறி தப்பிச் சென்ற இருவரையும் இழுத்து பைக்கோடு கீழே தள்ளிவிட்டார். மீண்டும் எழுந்து செல்ல முயன்றபோது ஒருவனை பிடித்துக்கொண்டார். அவன் பைக்கில் ஏற முயன்றபோது தப்ப விடாமல் பிடித்துக்கொள்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

பின்னர் செயின் பறித்த திருடர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News