இந்தியா

வினய் மோகன் குவாத்ரா

வெளியுறவுத்துறை செயலாளர் குவாத்ரா பதவிக்காலம் நீட்டிப்பு

Published On 2022-11-28 14:28 GMT   |   Update On 2022-11-28 14:28 GMT
  • இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக பதவி வகித்து வருகிறார் வினய் மோகன் குவாத்ரா.
  • அவரது பதவிக்காலத்தை மேலும் 16 மாதத்துக்கு நீட்டித்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி:

மத்திய வெளியுறவுத்துறை புதிய செயலாளராக வினய் மோகன் கத்ரா கடந்த மே மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது பதவி காலம் அடுத்த மாதம் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், அவரது பதவிக்காலத்தை மேலும் 16 மாதத்துக்கு நீட்டித்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதலின் பேரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் 2024 ஏப்ரல் 30-ம் தேதி வரை குவாத்ரா பணியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவுத்துறை விவகாரங்களில் நீண்டகால அனுபவம் பெற்றவரான வினய் மோகன் குவாத்ரா, நேபாளத்துக்கான தலைமை தூதராக பணியாற்றி வந்தார்.

வினய் மோகன் குவாத்ரா கடந்த 1988-ம் ஆண்டில் வெளியுறவுத் துறை பணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News