இந்தியா

ஹரியானா: பாஜக எம்.பி பிரிஜேந்திர சிங் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்

Published On 2024-03-10 09:35 GMT   |   Update On 2024-03-10 10:32 GMT
  • பாஜகவில் இருந்து விலகுவதாக பிரிஜேந்திர சிங் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
  • பிரிஜேந்திர சிங், வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஹிஸார் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என கூறப்படுகிறது.

ஹரியானா மாநிலம் ஹிஸார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜேந்திர சிங் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார்.

பாஜகவில் இருந்து விலகுவதாக பிரிஜேந்திர சிங் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "அரசியல் காரணங்களுக்காக பாஜகவின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். கட்சியினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், தேசிய தலைவர் ஜே.பி நட்டா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு ஹிசார் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் எம்.பி பிரிஜேந்திர சிங், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவரது இல்லத்தில் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

பிரிஜேந்திர சிங், வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஹிஸார் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என கூறப்படுகிறது.

Similar News