இந்தியா
ஒடிசாவில் இரவில் பணியாற்ற பெண்களுக்கு அரசு அனுமதி
- இரவுப் பணிகளில் பெண்கள் பணிபுரிய அனுமதித்து விரிவான வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
- இரவுப் பணிகளில் குறைந்தது 3 பெண் ஊழியர்கள் இருக்க வேண்டும்.
புவனேஸ்வரம்:
ஒடிசா மாநில அரசு அந்த மாநில தொழிலாளர் மற்றும் பணியாளர் மாநில காப்பீட்டுத் துறை, தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் பிற வணிக நிறுவனங்களில் இரவுப் பணிகளில் பெண்கள் பணிபுரிய அனுமதித்து விரிவான வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
அதில் இரவுப் பணிகளில் குறைந்தது 3 பெண் ஊழியர்கள் இருக்க வேண்டும், அவர்களை அழைத்துச் சென்று இறக்கிவிட ஜிபிஎஸ்-கண்காணிப்பு அமைப்புடன் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். என்பது உள்பட பல்வேறு வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ளது.