இந்தியா

ராஜஸ்தானில் துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை

Published On 2023-03-07 03:11 GMT   |   Update On 2023-03-07 03:11 GMT
  • ஜெய்ப்பூரின் ஷியாம்நகர் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை உள்ளது.
  • கொள்ளையர்களை கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் அடையாளம் காண முயன்றுவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரின் ஷியாம்நகர் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை உள்ளது. இங்கு நேற்று வந்த 2 முகமூடி கொள்ளையர்கள், துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.10 லட்சத்தை பறித்தனர். வங்கிக்கு நடந்து வந்த அவர்கள், கொள்ளையடித்தபின் வங்கி ஊழியர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர்.

கொள்ளையர்களை கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் அடையாளம் காண முயன்றுவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News