இந்தியா

ஆகாசா ஏர்

செல்லப்பிராணிகளும் இனி விமானத்தில் பயணிக்கலாம் - ஆகாசா ஏர் நிறுவனம் அறிவிப்பு

Published On 2022-10-07 00:39 GMT   |   Update On 2022-10-07 00:39 GMT
  • ஆகாசா ஏர் விமான நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.
  • ஆகாசா ஏர் நிறுவனம் செல்லப் பிராணிகளை விமானங்களில் அனுமதிக்கும் 2-வது விமான நிறுவனம் ஆகும்.

மும்பை:

கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட ஆகாசா ஏர் விமான நிறுவனம் இந்தியாவில் வணிக ரீதியான விமானங்களை இயக்கி வருகிறது. முதலில் மும்பையிலிருந்து அகமதாபாத் வரையிலான விமான சேவையை வழங்கி வந்த இந்நிறுவனம் தற்போது கூடுதல் வழித்தடங்களில் பயணிகளுக்கு விமான சேவையை வழங்கி வருகிறது.

இந்நிலையில், பயணிகள் இனி தங்கள் செல்லப் பிராணிகளுடன் விமானத்தில் பயணம் செய்ய ஆகாசா ஏர் நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. பயணிகள் தங்கள் செல்லப் பிராணிகளுடன் பயணம் செய்வதற்கான முன்பதிவு அக்டோபர் 15 முதல் தொடங்கும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. இதை தொடர்ந்து நவம்பர் 1 முதல் செல்லப் பிராணிகள் விமானத்தில் பயணம் செய்யலாம் என ஆகாசா தெரிவித்துள்ளது.

இதன்மூலம் செல்லப்பிராணிகளை விமானங்களில் அனுமதிக்கும் இரண்டாவது விமான நிறுவனமாக ஆகாசா ஏர் மாறியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் மட்டுமே நாய்கள், பூனைகள் மற்றும் பறவைகள் போன்ற வீட்டு செல்லப்பிராணிகளை விமானத்தில் பயணம் செய்ய அனுமதி அளித்துள்ளது.

Tags:    

Similar News