இந்தியா

டெல்லியில் 11-ந் தேதி ஆம் ஆத்மி பிரமாண்ட பேரணி

Published On 2023-06-07 15:45 IST   |   Update On 2023-06-07 15:45:00 IST
  • கட்சிக்கு உரிய அதிகாரங்களை வழங்க சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
  • மத்திய அரசின் அவசர சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டி வருகிறார்.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அந்த கட்சிக்கு உரிய அதிகாரங்களை வழங்க சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு அவசர சட்டம் மூலம் சேவை துறைகளில் டெல்லி மாநில அரசு அதிகாரம் செலுத்துவதை தடுத்துள்ளது.

இதையடுத்து மத்திய அரசின் அவசர சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டி வருகிறார். பாராளுமன்றத்தில் அந்த அவசர சட்டத்தை தோற்கடிக்கவும் அவர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் வருகிற 11-ந் தேதி மத்திய அரசின் அவசர சட்டத்தை கண்டித்து டெல்லியில் மிக பிரமாண்ட பேரணி நடத்தப் போவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

Tags:    

Similar News