செய்திகள்
கைது

‘ஜெய் ஸ்ரீராம்’ எனக் கோஷமிடக்கோரி வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்திய கும்பல்

Published On 2021-11-28 09:56 GMT   |   Update On 2021-11-28 09:56 GMT
காஷ்மீரைச் சேர்ந்த வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்களில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
ஜார்கண்ட்:

காஷ்மீரை சேர்ந்த 34 வயது மதிக்கத்தக்க வியாபாரி குளிர்கால ஆடைகளை விற்பனை  செய்து வருகிறார். ஜார்காண்டில் இவரும், சக வியாபாரிகளும் இணைந்து நேற்று ஆடைகளை விற்பனை செய்து வந்துள்ளனர்.

அப்போது, இவர்களை சுற்றி வளைத்த 25 பேர் கொண்ட மர்ம நபர்கள், ‘ஜெய் ஸ்ரீராம், பாகிஸ்தான் ஒழிக’ என்று கோஷமிடும்படி கட்டாயப்படுத்தி உள்ளனர்.

அவர்கள் கோஷமிட மறுத்ததை அடுத்து,  அந்த கும்பல் வியாபாரிகளை கடுமையாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட வியாபாரிகள் போலீசாரிடம், புகார் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையில் வியாபாரிகள் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.

அந்த வீடியோவில் பாதிப்புக்குள்ளான வியாபாரி, “காஷ்மீரை சேர்ந்தவர்களாக இருப்பது எங்கள் குற்றமா? நாங்கள் இந்தியர்கள் இல்லையா ? அவர்கள் எப்போதும் ஜெய் ஸ்ரீராம், பாகிஸ்தான் ஒழிக என்று கோஷமிடச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்.

நாங்கள் நால்வரும் இரக்கமின்றி தாக்கப்பட்டோம். நாங்களும் இந்தியர்கள்தான். சட்டம் அனைவருக்கும் சமமானது. மதத்தைக் கொண்டு பாகுபாடு காட்டக் கூடாது” என ஆவேசமாக கூறுகிறார்.

இந்த வீடியோவை பார்த்த அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், “குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக கும்பலை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரவித்துள்ளனர்.
Tags:    

Similar News