செய்திகள்
கேரளாவில் இன்று புதிதாக மேலும் 4,280 பேருக்கு கொரோனா
கேரளாவில் தற்போது 51,302 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று புதிதாக மேலும் 4,280 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5,379 பேர் குணமடைந்தள்ள நிலையில், 35 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 51,302 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 50,23,658 பேர் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 38,353 ஆக உயர்ந்துள்ளது.