செய்திகள்
மாணவர்களுடன் இணைந்து கபடி விளையாடிய நடிகை ரோஜா
ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏவான நடிகை ரோஜா, மாணவர்களுடன் கபடி விளையாடி போட்டியை தொடங்கி வைத்தார்.
நகரி:
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் நகரி தொகுதியில் நடிகை ரோஜா அறக்கட்டளை நடத்தி வருகிறார். கொரோனாவால் மன இறுக்கத்தில் உள்ள மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகையில் தனது அறக்கட்டளை சார்பில் கபடி போட்டியை நடத்தினார்.
நகரி மேல்நிலைப் பள்ளியில் கபடி போட்டியை தொடங்கி வைத்த ரோஜா, மாணவர்களுடன் கபடி விளையாடினார். ரோஜா ஒரு அணியிலும், அவரது கணவர் செல்வமணி ஒரு அணியிலும் இணைந்து கபடி விளையாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.