செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மகாராஷ்டிரா முதலிடம்

Published On 2021-05-13 16:59 GMT   |   Update On 2021-05-13 16:59 GMT
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் இதுவரை 1.89 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

மகாராஷ்டிராவிற்கு அடுத்தடுத்த இடங்களில் குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன.
Tags:    

Similar News