செய்திகள்
சுவேந்து அதிகாரி வேட்பு மனு தாக்கல்

மம்தா பானர்ஜியை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்தார் சுவேந்து அதிகாரி

Published On 2021-03-12 11:13 GMT   |   Update On 2021-03-12 11:13 GMT
மேற்கு வங்கத்தில் மாற்றத்தை கொண்டு வர திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பா.ஜனதா வேட்பாளர் சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.
நந்திகிராம்:

மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து அவரது முன்னாள் உதவியாளரும் தற்போது பா.ஜனதாவில் சேர்ந்துள்ளவருமான சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.  அவர் இன்று பிரமாண்ட ஊர்வலம் நடத்தி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுவேந்து அதிகாரி, மேற்கு வங்கத்தில் வேலைவாய்ப்புகள் போதிய அளவில் இல்லை என்றும், மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்றால் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை அகற்ற வேண்டும் என்றும் கூறினார். மேலும், திரிணாமுல் காங்கிரஸ் ஒரு தனியார் நிறுவனமாக மாறி உள்ளது, அங்கு மம்தாவும் அவரது மருமகனும் மட்டும்தான் சுதந்திரமாக பேச முடியும் என்றும் சுவேந்து அதிகாரி விமர்சித்தார்.
Tags:    

Similar News