செய்திகள்
பிரியங்கா காந்தி

வேலைவாய்ப்பு கோரி போராடும் இளைஞர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் - பிரியங்கா காந்தி

Published On 2020-09-10 03:04 IST   |   Update On 2020-09-10 08:46:00 IST
வேலைவாய்ப்பு கோரி இளைஞர்கள் குரல் எழுப்பி போராடுகிறார்கள். அவர்களுக்கு நாம் ஆதரவு அளிக்கவேண்டும் என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி குறைந்து பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கும், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்ததற்கும் மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசின் தவறான அணுகுமுறையே காரணம் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

இந்த நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், ‘‘அரசுப்பணி வேலைக்காக தேர்வுகள் நடத்துவதையும், ஆட்களை தேர்ந்து எடுப்பதையும் நிறுத்திவிட்டார்கள். இதனால் வேலைவாய்ப்பு கோரி இளைஞர்கள் குரல் எழுப்பி போராடுகிறார்கள். அவர்களுக்கு நாம் ஆதரவு அளிக்கவேண்டும்’’ என்று கூறி உள்ளார்.

Similar News