செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

மேற்கு வங்காளத்தில் மேலும் 3,232 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-08-22 22:29 IST   |   Update On 2020-08-22 22:29:00 IST
மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் 3,232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,35,596 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,737 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,04,959 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு தற்போது வரை 27,900  பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

Similar News