செய்திகள்
தேவேந்திர பட்னாவிஸ் தானேயில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஆய்வு செய்த காட்சி.

மும்பை பெருநகர பகுதியில் கொரோனா பரவல் மோசமாக உள்ளது: தேவேந்திர பட்னாவிஸ்

Published On 2020-07-07 03:13 GMT   |   Update On 2020-07-07 03:13 GMT
மும்பை பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் கொரோனா பரவல் மோசமாக உள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மும்பை :

கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மராட்டியத்தில் தலைநகர் மும்பையை அடுத்து தானே மாவட்டத்தில் இந்த வைரசால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில், பாரதீய ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் தானே மாவட்டத்தின் தானே, நவிமும்பை, கல்யாண்-டோம்பிவிலி, மிராபயந்தர், உல்லாஸ்நகர், ராய்காட் மாவட்டத்தின் பன்வெல் ஆகிய இடங்களில் கடந்த 3 நாட்களாக சுற்றுப்பயணம் செய்து கொரோனா நிலைமை குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் இது தொடர்பாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மும்பை பெருநகர எல்கைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பரவல் மோசமாக உள்ளது. இங்கு கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும். பரிசோதனை செய்த ஒரு நாளில் முடிவை தெரிவிக்க வேண்டும். 3 நாள் சுற்றுப்பயணத்தின் போது, கொரோனா நிலைமை தொடர்பாக அறிந்தவற்றை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவிற்கு அறிக்கையாக சமர்ப்பிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News