செய்திகள்
இலங்கை செல்பவர்களுக்கு இந்தியா புதிய அறிவுரை
இலங்கை செல்பவர்களுக்கு இந்தியா புதிய அறிவுரை வழங்கி உள்ளது.
புதுடெல்லி:
இலங்கையில் கடந்த மாதம் 21-ந் தேதி தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதனால், அவசியமின்றி இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு இந்தியர்களை இந்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டது. ஒரு மாதம் கடந்தநிலையில், நேற்று வெளியுறவு அமைச்சகம் புதிய அறிவுரை ஒன்றை வெளியிட்டது.
அதில், “ஊரடங்கு ரத்து, சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம், பள்ளிகள் திறப்பு என்று இலங்கையில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வருகிறது. இருப்பினும், அங்கு செல்லும் இந்தியர்கள், கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும்.
ஏதேனும் உதவி தேவைப்பட்டால், கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தையோ அல்லது கண்டி, யாழ்ப்பாணம், ஹம்பன்தொட்டா ஆகிய இடங்களில் உள்ள இந்திய துணை தூதரகங்களையோ எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம்” என்று கூறப்பட்டுள்ளது.