செய்திகள்
ராமரின் பெயரை இந்தியாவில் சொல்லாமல் பாகிஸ்தானிலா கூறமுடியும்? - அமித் ஷா ஆவேசம்
மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற பிரசாரப்பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, ராமரின் பெயரை இந்தியாவில் சொல்லாமல் பாகிஸ்தானிலா கூறமுடியும் என ஆவேசமாக பேசியுள்ளார். #Amitsha #BJP
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18,23,29 மற்றும் மே 6 ஆகிய தேதிகளில் 5ம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 12,16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதையடுத்து காங்கிரஸ் , பாஜக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று மேற்கு வங்காளத்தின் கத்தால் பகுதியில் நடந்த பிரசாரப்பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
மத்தியில் ஆளும் பாஜக, நிச்சயம் மேற்கு வங்காளத்தில் 23 தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும். கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 4 லட்சத்து 24 ஆயிரத்து 800 கோடி மேற்கு வங்காளத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது.
'ஜெய் ஸ்ரீராம்’ என்று உச்சரிப்பவர்களை மம்தா பானர்ஜி சிறையில் தள்ளுகிறார். ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று உச்சரித்தாலே சிறையில் அடைக்கும் நிலைமைதான் மேற்கு வங்காளத்தில் இருக்கிறது. ராமரின் பெயரை இந்தியாவில் சொல்லாமல் பாகிஸ்தானிலா கூற முடியும்?
இவ்வாறு அவர் பேசினார். #Amitsha #BJP
மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18,23,29 மற்றும் மே 6 ஆகிய தேதிகளில் 5ம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 12,16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதையடுத்து காங்கிரஸ் , பாஜக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று மேற்கு வங்காளத்தின் கத்தால் பகுதியில் நடந்த பிரசாரப்பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, மோடியை பிரதமராக கருதவில்லை என கூறினார். அரசியலமைப்பின் படி, மோடி நாட்டில் உள்ள மக்களால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் இப்போது நடைபெற்று கொண்டிருக்கும் தேர்தலும், நாட்டில் ஜனநாயகத்தை மீண்டும் நிலை நாட்டும் என்பதில் சந்தேகமில்லை.
மத்தியில் ஆளும் பாஜக, நிச்சயம் மேற்கு வங்காளத்தில் 23 தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும். கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 4 லட்சத்து 24 ஆயிரத்து 800 கோடி மேற்கு வங்காளத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது.
'ஜெய் ஸ்ரீராம்’ என்று உச்சரிப்பவர்களை மம்தா பானர்ஜி சிறையில் தள்ளுகிறார். ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று உச்சரித்தாலே சிறையில் அடைக்கும் நிலைமைதான் மேற்கு வங்காளத்தில் இருக்கிறது. ராமரின் பெயரை இந்தியாவில் சொல்லாமல் பாகிஸ்தானிலா கூற முடியும்?
இவ்வாறு அவர் பேசினார். #Amitsha #BJP