செய்திகள்

சுமித்ரா மகாஜன் தேர்தலில் போட்டி இல்லை- இந்தூர் தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்க வேண்டுகோள்

Published On 2019-04-05 15:32 IST   |   Update On 2019-04-05 16:00:00 IST
மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறியுள்ளார். இந்தூர் தொகுதிக்கு வேறு வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #SumitraMahajan
புதுடெல்லி:

மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்(வயது 75), மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதியில் இருந்து 8 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் அவர் இந்தூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு இருந்தது.



ஆனால் அவருக்கு 75 வயது ஆவதால் அவருக்கு இந்த முறை தொகுதி ஒதுக்குவது சந்தேகம் என்று பரவலாக பேசப்பட்டது. அதேசமயம் இந்தூர் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிப்பும் தாமதம் ஆனது.

இந்நிலையில், இதுபற்றி இன்று கருத்து தெரிவித்த சுமித்ரா மகாஜன், வரும் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என்று கூறினார்.

“வேட்பாளர் அறிவிப்பு தாமதம் ஆவது தொடர்பாக பல்வேறு யூகமான தகவல்கள் வந்ததால், இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்தேன். வேட்பாளர் தேர்வை கட்சித் தலைமையின் முடிவுக்கே விட்டுவிட்டேன். நான் போட்டியிட மாட்டேன். ஆனாலும் கட்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவதுடன், பிரசாரத்திலும் ஈடுபடுவேன்’ என்றும் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். #LokSabhaElections2019 #SumitraMahajan

Similar News