செய்திகள்

வெளியே போகும் பிரதமர் மோடிக்கு அரசு அதிகாரிகள் அடிப்பணிய கூடாது - சந்திரபாபு நாயுடு

Published On 2019-04-05 14:21 IST   |   Update On 2019-04-05 14:21:00 IST
ஆந்திராவில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சந்திரபாபு நாயுடு, வெளியே போகும் பிரதமர் மோடிக்கு, அதிகாரிகள் அடிப்பணிய கூடாது என வலியுறுத்தி உள்ளார். #ITRaid #ChandrababuNaidu
ஐதராபாத்:

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சிகளும் பொதுக்கூட்டம், பிரசாரம், மற்றும் வேட்புமனு தாக்கல் போன்ற பல்வேறு பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதேப்போல் தேர்தல் ஆணையமும் பாதுகாப்பு பணிகள் மற்றும் பணப்பட்டுவாடாவை ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு பணம், தங்கம் போன்றவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.



இதற்கு எதிப்பு தெரிவித்து ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் இன்று தர்ணா போராட்டத்தில்  ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

பிரதமர் மோடியின் உத்தரவின்படி வருமான வரித்துறையினர் தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர்கள், பிரமுகர்கள் வீடுகளில் மட்டும் சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால், அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அனைத்து கட்சிகளும் இணையாக நடத்த வேண்டும். ஒரு கட்சியினை ஒடுக்கி, மற்றொரு கட்சிக்கு ஆதரவு அளிக்கக்கூடாது.

இது போன்ற செயல்களில் ஈடுபடும் மோடியை நான் எச்சரிக்கிறேன். இவை தொடர்ந்தால் உரிய விலை கொடுக்க நேரிடும். இந்திய ஜனநாயகத்தினை பாதுகாக்கவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மோடி வெளியே போகவிருக்கும் பிரதமர். அவருக்கு அரசு அதிகாரிகள் அடிப்பணிய கூடாது. அப்படி செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இவ்வாறு அவர் பேசினார். #ITRaid #ChandrababuNaidu  

Similar News