செய்திகள்
கோவாவில் தனியாக நடந்து சென்ற பிரிட்டன் பெண் பாலியல் பலாத்காரம்
கோவா மாநிலத்தில் தனியாக கடற்கரை நோக்கி நடந்து சென்ற பிரிட்டன் நாட்டு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #GoaBeach #BritishWomanHarrassed
பனாஜி:
கோவா மாநிலம் தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ள பலோலம் பீச் அருகே பிரிட்டனைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர் தங்கியிருந்தார். அவர் நேற்று இரவு வடக்கு கோவாவில் உள்ள திவிம் ரெயில் நிலையம் செல்வதற்காக கேனகோனா ரெயில் நிலையம் சென்றார். ஆனால், ரெயில் மிகவும் தாமதமானதால், இன்று அதிகாலை அங்கிருந்து தான் தங்கியிருந்த பலோலம் கடற்கரை பகுதிக்கு நடந்து வந்துள்ளார்.
அதிகாலை 4 மணியளவில் அவர் தனியாக நடந்து வருவதைக் கவனித்த மர்ம ஆசாமி, அந்த பெண்ணை திடீரென தாக்கி நிலைகுலையச் செய்து, பின்னர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அத்துடன் அந்த பெண் கொண்டு வந்த லக்கேஜ்களையும் (3 பேக்) திருடிச் சென்றுள்ளான்.
இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியைத் தேடி வருகின்றனர். #GoaBeach #BritishWomanHarrassed
கோவா மாநிலம் தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ள பலோலம் பீச் அருகே பிரிட்டனைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர் தங்கியிருந்தார். அவர் நேற்று இரவு வடக்கு கோவாவில் உள்ள திவிம் ரெயில் நிலையம் செல்வதற்காக கேனகோனா ரெயில் நிலையம் சென்றார். ஆனால், ரெயில் மிகவும் தாமதமானதால், இன்று அதிகாலை அங்கிருந்து தான் தங்கியிருந்த பலோலம் கடற்கரை பகுதிக்கு நடந்து வந்துள்ளார்.
அதிகாலை 4 மணியளவில் அவர் தனியாக நடந்து வருவதைக் கவனித்த மர்ம ஆசாமி, அந்த பெண்ணை திடீரென தாக்கி நிலைகுலையச் செய்து, பின்னர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அத்துடன் அந்த பெண் கொண்டு வந்த லக்கேஜ்களையும் (3 பேக்) திருடிச் சென்றுள்ளான்.
இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியைத் தேடி வருகின்றனர். #GoaBeach #BritishWomanHarrassed