செய்திகள்
சந்திரசேகரராவ் மீண்டும் ஆட்சியை பிடிப்பார்- புதிய கருத்து கணிப்பில் தகவல்
தெலுங்கானா சட்டசபை தேர்தலில் சந்திரசேகரராவ் கட்சி 70 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று புதிய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. #ChandrasekharRao #TelanganaElection
நகரி:
தெலுங்கானா சட்டசபை தேர்தல் வருகிற டிசம்பர் 7-ந்தேதி நடக்கிறது. இந்த நிலையில் அங்கு யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்று டைம்ஸ் நவ், சி.என்.எக்ஸ் நிறுவனம் இணைந்து கருத்து கணிப்பு நடத்தின.
இதில் 119 தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி 70 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.
காங்கிரஸ், தெலுங்குதேசம், இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட 4 கட்சிகள் கூட்டணிக்கு 33 இடங்களும், பா.ஜனதாவுக்கு 3 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி 37-55 சதவீத ஓட்டுகள் பெறும் என்று கணித்துள்ளது. காங்கிரசுக்கு 27.98 சதவீத ஓட்டுகளும், தெலுங்கு தேசம் கட்சிக்கு 5.66 சதவீத ஓட்டுகளும், முதல்வராக சந்திரசேகரராவுக்கு 45 சதவீத பேரும், காங்கிரஸ் தலைவர் உத்தம்குமாருக்கு 30 சதவீத பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 52 சதவீத பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உதயமாவதற்கு எதிர்ப்பு தெரிவித்த தெலுங்கு தேசத்துடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ்- தெலுங்கு தேசம் கூட்டணிக்கு பெரும் பாலானோர் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் தெலுங்கு தேசம் கட்சியையும், அதன் தலைவர் சந்திரபாபு நாயுடுவை குறிப்பிடாமல் பேசினார். #ChandrasekharRao #TelanganaElection
தெலுங்கானா சட்டசபை தேர்தல் வருகிற டிசம்பர் 7-ந்தேதி நடக்கிறது. இந்த நிலையில் அங்கு யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்று டைம்ஸ் நவ், சி.என்.எக்ஸ் நிறுவனம் இணைந்து கருத்து கணிப்பு நடத்தின.
இதில் 119 தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி 70 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.
காங்கிரஸ், தெலுங்குதேசம், இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட 4 கட்சிகள் கூட்டணிக்கு 33 இடங்களும், பா.ஜனதாவுக்கு 3 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி 37-55 சதவீத ஓட்டுகள் பெறும் என்று கணித்துள்ளது. காங்கிரசுக்கு 27.98 சதவீத ஓட்டுகளும், தெலுங்கு தேசம் கட்சிக்கு 5.66 சதவீத ஓட்டுகளும், முதல்வராக சந்திரசேகரராவுக்கு 45 சதவீத பேரும், காங்கிரஸ் தலைவர் உத்தம்குமாருக்கு 30 சதவீத பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 52 சதவீத பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உதயமாவதற்கு எதிர்ப்பு தெரிவித்த தெலுங்கு தேசத்துடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பிரதமர் பதவிக்கு மோடிக்கு 33.61 சதவீத பேரும், ராகுல்காந்திக்கு 30 சதவீத பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ்- தெலுங்கு தேசம் கூட்டணிக்கு பெரும் பாலானோர் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் தெலுங்கு தேசம் கட்சியையும், அதன் தலைவர் சந்திரபாபு நாயுடுவை குறிப்பிடாமல் பேசினார். #ChandrasekharRao #TelanganaElection