செய்திகள்

ஒடிசாவில் ஹாக்கி உலகக் கோப்பை - மணல் சிற்பத்துடன் வரவேற்ற சுதர்சன் பட்நாயக்

Published On 2018-11-23 12:04 IST   |   Update On 2018-11-23 12:04:00 IST
ஒடிசாவில் நடைபெற உள்ள ஹாக்கி உலகக் கோப்பைக்கு அனைவரையும் வரவேற்கும் வகையில் சுதர்சன் பட்நாயக் புரி கடற்கரையில் மணல் சிற்பம் உருவாக்கி உள்ளார். #SudarsanPattnaik #SandArt #HockeyWorldCup
புரி:

ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தைச் சேர்ந்த சர்வதேச மணற்சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக், சமூக அக்கறையுடன் பல்வேறு மணல் சிற்பங்களை உருவாக்கி மக்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளார். மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த தலைவர்களின் பிறந்தநாள், மறைவு, சாதனைகள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை தனது கைவண்ணம் மூலம் மணல் சிற்பங்களாக பிரதிபலிக்கச் செய்கிறார் பட்நாயக்.



அவ்வகையில், கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு புரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் ஒரு மணற்சிற்பம் உருவாக்கி வாழ்த்து தெரிவித்துள்ளார். பண்டைய ஒடிசாவின் புகழ்பெற்ற கடல்வழிப் போக்குவரத்தை குறிக்கும் வகையில் படகு சிற்பம் உருவாக்கி உள்ளார். ஒடிசாவில் விரைவில் துவக்க உள்ள உலகக் கோப்பை ஹாக்கி தொடரை குறிக்கும் வகையில் அந்த படகில் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பம் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

அதனை புகைப்படம் எடுத்து தனது டுவிட்டரில் பதிவிட்டு, கார்த்திகா பூர்ணிமா வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு அனைவரையும் வரவேற்றுள்ளார். #SudarsanPattnaik #SandArt #HockeyWorldCup
Tags:    

Similar News