செய்திகள்

சத்தீஸ்கர் தேர்தலில் 42 கோடீசுவர வேட்பாளர்கள் - வெற்றி பெற பணத்தை அள்ளி வீசுகிறார்கள்

Published On 2018-11-05 10:10 GMT   |   Update On 2018-11-05 10:12 GMT
சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 42 கோடீசுவரர்கள் வெற்றி பெறுவதற்காக அதிக அளவிலான பணத்தை செலவு செய்கின்றனர். #BJP #Congress

புதுடெல்லி:

சத்தீஸ்கர் மாநிலத்தில் வருகிற 12-ந்தேதியும், 20-ந்தேதியும் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

90 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சத்தீஸ்கர் சட்ட சபையில் அடுத்து ஆட்சியை பிடிக்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ், மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ்-அஜீத்ஜோகி கூட்டணி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளில் 187 பேர் களத்தில் உள்ளனர்.

இவர்கள் பின்னணி பற்றி ஜனநாயக சீர்திருத்த கழகம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளது.

 


வேட்பாளர்களில் பெரும் பாலானவர்கள், வயதானவர்கள் என்று தெரிய வந்துள்ளது. 20 சதவீதம்பேர் தான் இளைஞர்கள் என்று புள்ளி விபரம் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

14 பெண் வேட்பாளர்கள் 60 வயதை கடந்தவர்கள் என்று தெரிகிறது. வேட்பாளர்களில் கணிசமானவர்கள் மீது கிரிமினல் குற்ற வழக்குகள் இருப்பது ஆவணங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

மொத்த வேட்பாளர்களில் 42 பேர் மிகப்பெரிய கோடீசுவரர்கள் என்று தெரிய வந்துள்ளது. இவர்களில் 13 பேர் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள். 13 பேர் காங்கிரசை சேர்ந்தவர்கள். 4 பேர் அஜீத்ஜோகி கட்சியை சேர்ந்தவர்கள். ஒருவர் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவர் ஆவார்.

66 சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்கள் அனைவரும் ரூ.1 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இவர்கள் அனைவரும் பணத்தை அள்ளி வீசி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். #BJP #Congress

Tags:    

Similar News