செய்திகள்
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி - அமலாக்கத்துறையின் மனு நிராகரிப்பு
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் அமெரிக்கா செல்ல உச்சநீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. #AircelMaxis #SupremeCourt #KartiChidambaram
புதுடெல்லி:
முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கை அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருந்தது. மேலும், கார்த்தி சிதம்பரம் அமெரிக்க செல்ல அனுமதி வேண்டி மனுத்தாக்கல் செய்து இருந்தார்.
இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு, அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்தது. மேலும், செப்டம்பர் 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கார்த்தி சிதம்பரம் அமெரிக்கா செல்லவும் அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. #AircelMaxis #SupremeCourt #KartiChidambaram
முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கை அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருந்தது. மேலும், கார்த்தி சிதம்பரம் அமெரிக்க செல்ல அனுமதி வேண்டி மனுத்தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனது வாதத்தை முன்வைத்த அமலாக்கத்துறை, வழக்கு விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளது. இதனால் அவர் வெளிநாடுகள் செல்ல அனுமதிக்க கூடாது என கோரிக்கை விடுத்தது.
இதனால் அவர் வெளிநாடுகள் செல்ல இனிமேல் அனுமதிக்க கூடாது என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்து இருந்தது. மேலும், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான இடைக்கால தடையையும் ரத்து செய்யவும் வேண்டியிருந்தது.
இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு, அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்தது. மேலும், செப்டம்பர் 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கார்த்தி சிதம்பரம் அமெரிக்கா செல்லவும் அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. #AircelMaxis #SupremeCourt #KartiChidambaram