செய்திகள்

காப்பகத்தில் சிறுமிகளை சீரழித்த விவகாரம் - பீகார் முன்னாள் மந்திரி வீட்டில் சிபிஐ சோதனை

Published On 2018-08-17 06:38 GMT   |   Update On 2018-08-17 06:38 GMT
பீகாரில் சிறுமிகள் காப்பகத்தில் நடந்த பாலியல் வன்முறை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், இன்று மாநில முன்னாள் மந்திரியின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். #MuzaffarpurShelterHome #CBIRaid
பாட்னா:

பீகார் மாநிலம் முசாபர்பூரில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

சிறுமிகள் சீரழிக்கப்பட்ட காப்பகத்திற்கு மாநில சமூக நலத்துறை மந்திரி மஞ்சு வர்மாவின் கணவர் சந்தேஷ்வர் வர்மா அடிக்கடி சென்று வந்ததாகவும், அதனால் பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்தேஷ்வர் வர்மாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதற்கு தார்மீக பொறுப்பேற்று மஞ்சு வர்மா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததையடுத்து, மஞ்சு வர்மா கடந்த வாரம் பதவியை ராஜினாமா செய்தார்.



இந்நிலையில், பாட்னாவில் உள்ள மஞ்சு வர்மாவின் வீடுகள் உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 5 இடங்களில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். காப்பகத்தை நிர்வகித்து வரும் பிரஜேஷ் தாக்கூருக்கு சொந்தமான 7 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #MuzaffarpurShelterHome #BiharMinister #CBIRaid
Tags:    

Similar News