செய்திகள்

ஒடிசா கனமழை - 12 பேர் பலி

Published On 2018-07-24 01:50 IST   |   Update On 2018-07-24 01:50:00 IST
ஒடிசாவில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மழை பாதிப்பு பகுதிகளில், பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கனமழைக்கு இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தின் மகாநதி மற்றும் பைடாராணி ஆறுகளில் வெள்ளம் பெறுக்கெடுத்து ஓடுகிறது. எந்த ஒரு அவசரநிலைமையையும் சமாளிக்கவும், கனமழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் தயார் நிலையில் இருக்குமாறு அதிகாரிகளுக்கு அம்மநில முதல்-மந்திரி நவின் பட்னாயக் அறிவுறுத்தியுள்ளார்.
Tags:    

Similar News