செய்திகள்

சூதாட்டத்தை சட்ட பூர்வமாக்க வேண்டும் - மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரை

Published On 2018-07-05 16:08 GMT   |   Update On 2018-07-05 16:08 GMT
கருப்புப்பணத்தை தடுக்கும் வகையில் பந்தையங்கள் மற்றும் சூதாட்டத்தை சட்ட பூர்வமாக மாற்ற வேண்டும் என மத்திய சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
புதுடெல்லி:

கிரிக்கெட் சூதாட்டம் மற்றும் சில வகை பந்தயங்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை. இந்த செயல்பாடுகளின் வழியா கருப்புப்பணம், ஹவாலா பணம் ஆகியவை பெரும்பாலும் புழங்கும். இந்நிலையில், சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என மத்திய சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

பான் கார்டு, ஆதார் எண் ஆகியவை பெறப்பட்டு, முழுவதும் பணமில்லா பரிவர்த்தனை முறையில் இதனை செயல்படுத்தினால் கருப்புப்பணத்தை பெருமளவில் கட்டுப்படுத்த முடியும் என அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News