செய்திகள்

பீகாரில் விஷவாயு தாக்கி 4 துப்புரவு தொழிலாளர்கள் பலி

Published On 2018-07-01 09:57 GMT   |   Update On 2018-07-01 09:57 GMT
பீகார் மாநிலத்தில் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய 4 துப்புரவு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா :

பீகார் மாநிலம், சகர்சா மாவட்டத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 4 துப்புரவு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கியதால் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் சுய நினைவிழந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கழிவுநீர் தொட்டியில் விஷத்தன்மை உடைய கார்பன்-டை-ஆக்சைடு வாயு நிரம்பி இருந்த நிலையில் துப்புரவு தொழிலாளர்கள் தொட்டிக்குள் இறங்கியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என அம்மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News