செய்திகள்

காஷ்மீரில் எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்து மூத்த ராணுவ அதிகாரி உயிரிழப்பு

Published On 2018-06-25 15:36 GMT   |   Update On 2018-06-25 15:36 GMT
ஜம்மு - காஷ்மீரில் எதிர்பாராத விதமாக துப்பாக்கியிலிருந்து குண்டு பாய்ந்ததில் மூத்த ராணுவ அதிகாரி மஹாதிக் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்:

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குந்த்ரூ ராணுவ தலமையகத்தில் கலோனியலாக இருப்பவர் மஹாதிக். தனது வாகனத்தில் இன்று அவர் செல்லும் போது, வேகத்தடையில் வாகனம் ஏறி இறங்கியதில் துப்பாக்கி கீழே விழுந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக குண்டு மஹாதிக்கின் கழுத்தில் பாய்ந்துள்ளது.

இதனை அடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த தகவலை ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News