செய்திகள்

குஜராத் பள்ளி கழிவறையில் சிறுவனை கொன்ற பத்தாம் வகுப்பு மாணவன் கைது

Published On 2018-06-23 10:21 GMT   |   Update On 2018-06-23 10:21 GMT
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் கழிவறையில் ஒன்பதாம் வகுப்பு மாணவனை கொன்ற பத்தாம் வகுப்பு மாணவனை போலீசார் இன்று கைது செய்தனர். #Vadodaraschoolmurder #GujaratStudentKilled
அகமதாபாத்:

குஜராத் மாநிலம் வதோதரா நகரின் பரன்போரா பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் கழிவறையில் தேவ் தாட்வி(14) என்னும் 9-ம் வகுப்பு மாணவன் நேற்று மாலை மர்மமான முறையில் இறந்து கிடந்தான். அவனது தலை மற்றும் உடலில் ரத்தக் காயங்கள் இருந்தன. அருகில் ஒரு கத்தியும் கிடந்தது. எனவே, மாணவனை யாரோ கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என கருதப்பட்டது.

இதுபற்றி  காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பள்ளிக்கு வந்து மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பள்ளி நிர்வாகிகள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.

உயிரிழந்த மாணவனுக்கும் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவனுக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. எனவே, அந்த மாணவன் ஆத்திரத்தில் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அந்த மாணவன் தலைமறைவாகிவிட்டதால், அவனைத் போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், தேடப்பட்டு வந்த மாணவன் மிஹிர் சுனாரா(15) என்பவனை போலீசார் கைது செய்துள்ளதாக வதோதரா நகர போலீஸ் கமிஷனர் மனோஜ் சசிதர் இன்று தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட மாணவன் அருகாமையில் உள்ள ஆனந்த் மாவட்டம், பக்ரோல் பகுதியை சேர்ந்தவன். வதோதராவில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்கி படித்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. #Vadodaraschoolmurder #studentkilledintoilet  #GujaratStudentKilled
Tags:    

Similar News