செய்திகள்
6 நாள் பயணமாக இந்தியா வந்தார் செஷெல்ஸ் அதிபர்
செஷெல்ஸ் அதிபர் டேனி பவுரி 6 நாள் அரசு முறை பயணமாக இன்று மாலை இந்தியா வந்தடைந்தார். #Seychellespresident #DannyFaure
காந்திநகர்:
செஷெல்ஸ் இந்தியப் பெருங்கடலில் ஒரு தீவு நாடு ஆகும். ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையிலிருந்து 1,500 கி. மீ தூரத்தில் அமைந்த சேஷெல்ஸ் குடியரசில் 155 தீவுகள் உள்ளன. இது பிரட்டனிடம் இருந்து 1976-ம் ஆண்டு ஜூன் மாதம் 29-ந்தேதி விடுதலை பெற்றது. அந்நாட்டின் சிறிய தீவு ஒன்றில் கடற்படை தளம் அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், அந்நாட்டு அதிபர் டேனி பவுரி 6 நாள் அரசு முறை பயணமாக இன்று மாலை இந்தியா வந்தடைந்தார். குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்துக்கு மாலை வந்தார்.
வருகிற திங்கட்கிழமை பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்த பயணத்தில் போது குஜராத், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு அவர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. #Seychellespresident #DannyFaure