செய்திகள்
திடீரென வெடித்து சிதறிய செல்போன் - மும்பை ஓட்டலில் பரபரப்பு
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்த வாடிக்கையாளர் சட்டைப்பையில் இருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. #Phoneexplodes
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் உள்ள ஓட்டலில் கடந்த திங்கட்கிழமை வழக்கம் போல் அனைவரும் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென வாடிக்கையாளர் ஒருவரின் சட்டைப்பையில் இருந்த செல்பொன் வெடித்து சிதறியது. அவரது பையில் இருந்து வந்த புகையை கண்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அந்த இடத்தில் இருந்து வெளியேறினர்.
செல்போனை அவர் உடனடியாக கீழே எரிந்தார். இருப்பினும் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செல்போன் வெடித்தற்கான சரியான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் பலமுறை நடைபெற்றுள்ளன. செல்போன்கள் அதிக அளவில் சூடாவதால் வெடித்து சிதறுவதாக கூறப்படுகிறது. #Phoneexplodes
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் உள்ள ஓட்டலில் கடந்த திங்கட்கிழமை வழக்கம் போல் அனைவரும் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென வாடிக்கையாளர் ஒருவரின் சட்டைப்பையில் இருந்த செல்பொன் வெடித்து சிதறியது. அவரது பையில் இருந்து வந்த புகையை கண்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அந்த இடத்தில் இருந்து வெளியேறினர்.
செல்போனை அவர் உடனடியாக கீழே எரிந்தார். இருப்பினும் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செல்போன் வெடித்தற்கான சரியான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் பலமுறை நடைபெற்றுள்ளன. செல்போன்கள் அதிக அளவில் சூடாவதால் வெடித்து சிதறுவதாக கூறப்படுகிறது. #Phoneexplodes