செய்திகள்

ஆந்திரப்பிரதேச மாநில பாஜக தலைவராக கண்ணா லக்‌ஷ்மிநாராயணா நியமனம்

Published On 2018-05-13 13:39 GMT   |   Update On 2018-05-13 13:39 GMT
ஆந்திரப்பிரதேசத்தில் புதிய மாநில பா.ஜ.க. தலைவராக முன்னாள் மந்திரி கண்ணா லக்‌ஷ்மிநாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். #KannaLakshminarayana #BJPstatepresident #APBJP

ஐதராபாத்:

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. தலைவராக விஷாகப்பட்டிணத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான ஹரிபாபு இருந்து வந்தார். இந்நிலையில் ஆந்திரப்பிரதேச மாநில பா.ஜ.க.வின் புதிய தலைவராக முன்னாள் மந்திரி கண்ணா லக்‌ஷ்மிநாராயணா நியமிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். 


சோமூ வீர்ராஜூ

ஆந்திரப்பிரதேச மாநில பா.ஜ.க. தேர்தல் கட்டுப்பாடு கமிட்டி தலைவராக சட்டமன்ற மேல்சபை உறுப்பினர் சோமு வீர்ராஜூ நியமிக்கப்பட்டிள்ளார். இந்த தகவலை பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் அர்ஜுன் சிங் தெரிவித்தார். #KannaLakshminarayana #BJPstatepresident #APBJP
Tags:    

Similar News