செய்திகள்

திருமண கோஷ்டியினர் சென்ற கார் குளத்தில் விழுந்தது - 7 பேர் பலி

Published On 2018-05-12 07:53 GMT   |   Update On 2018-05-12 07:53 GMT
மேற்கு வங்க மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியவர்கள் பயணம் செய்த கார் குளத்தில் விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். #BengalCarAccident
கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலம் கூச் பெகர் மாவட்டத்தில் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி முடிந்து உறவினர்கள் ஒரு காரில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். துபாமாரி காவல் சரகத்திற்கு உட்பட்ட ஜிரன்பூரில் சென்றபோது, கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரத்தில்  உள்ள குளத்தில் விழுந்து மூழ்கியது.

இதில் காருக்குள் இருந்த 5 வயது குழந்தை உள்பட 7 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இதில் 3 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தண்ணீரின் அடிப்பகுதிக்கு கார் சென்றுவிட்டதாலும், இருட்டு நேரம் என்பதாலும் உடனடியாக அவர்களை மீட்க முடியவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேபோல் வடக்கு தினஜ்பூன் காலாகாச் பகுதியில் போலீஸ் வேனும் லாரியும் இன்று நேருக்கு நேர் மோதியதில் 31 பேர் காயமடைந்தனர். #BengalCarAccident
Tags:    

Similar News