செய்திகள்
கைதானவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங்களையும் படத்தில் காணலாம்

காளஹஸ்தி அருகே ரூ.6 லட்சம் மதிப்பிலான செம்மரம் பறிமுதல்: 5 பேர் கைது

Published On 2016-12-26 05:21 GMT   |   Update On 2016-12-26 05:21 GMT
காளஹஸ்தி அருகே கடத்துவதற்கு தயாராக பதுக்கி வைத்திருந்த 13 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், 5 பேரை கைது செய்தனர். கைதானவர்களிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீகாளஹஸ்தி:

ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த தொட்டம்பேடு மண்டலத்தில் செம்மரங்கள் கடத்தப்படுவதாக தொட்டம்பேடு போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்தன.

தொட்டம்பேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையில் போலீசார் தொட்டம்பேடு மண்டலம் பீடி காலனி பகுதிக்குச் சென்றனர். அங்கு, பதுங்கியிருந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

பிடிபட்டவர்கள் திருத்தணியை அடுத்த மத்தூர் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன், அரக்கோணத்தைச் சேர்ந்த சுதாகர், ராணிப்பேட்டையைச் சேர்ந்த சிவக்குமார், சென்னை அம்பத்தூரை சேர்ந்த கன்னியப்பன், வெங்கடேஷ் என்று தெரிய வந்தது. 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து கடத்துவதற்கு தயாராக பதுக்கி வைத்திருந்த 13 செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். கைதானவர்களிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News