செய்திகள்
காளஹஸ்தி அருகே ரூ.6 லட்சம் மதிப்பிலான செம்மரம் பறிமுதல்: 5 பேர் கைது
காளஹஸ்தி அருகே கடத்துவதற்கு தயாராக பதுக்கி வைத்திருந்த 13 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், 5 பேரை கைது செய்தனர். கைதானவர்களிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீகாளஹஸ்தி:
ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த தொட்டம்பேடு மண்டலத்தில் செம்மரங்கள் கடத்தப்படுவதாக தொட்டம்பேடு போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்தன.
தொட்டம்பேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையில் போலீசார் தொட்டம்பேடு மண்டலம் பீடி காலனி பகுதிக்குச் சென்றனர். அங்கு, பதுங்கியிருந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
பிடிபட்டவர்கள் திருத்தணியை அடுத்த மத்தூர் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன், அரக்கோணத்தைச் சேர்ந்த சுதாகர், ராணிப்பேட்டையைச் சேர்ந்த சிவக்குமார், சென்னை அம்பத்தூரை சேர்ந்த கன்னியப்பன், வெங்கடேஷ் என்று தெரிய வந்தது. 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து கடத்துவதற்கு தயாராக பதுக்கி வைத்திருந்த 13 செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். கைதானவர்களிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த தொட்டம்பேடு மண்டலத்தில் செம்மரங்கள் கடத்தப்படுவதாக தொட்டம்பேடு போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்தன.
தொட்டம்பேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையில் போலீசார் தொட்டம்பேடு மண்டலம் பீடி காலனி பகுதிக்குச் சென்றனர். அங்கு, பதுங்கியிருந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
பிடிபட்டவர்கள் திருத்தணியை அடுத்த மத்தூர் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன், அரக்கோணத்தைச் சேர்ந்த சுதாகர், ராணிப்பேட்டையைச் சேர்ந்த சிவக்குமார், சென்னை அம்பத்தூரை சேர்ந்த கன்னியப்பன், வெங்கடேஷ் என்று தெரிய வந்தது. 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து கடத்துவதற்கு தயாராக பதுக்கி வைத்திருந்த 13 செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். கைதானவர்களிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.