இந்தியா

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- தடுக்க தவறிய தாய் கைது

Published On 2023-01-23 12:04 IST   |   Update On 2023-01-23 12:05:00 IST
  • 11 வயது சிறுமி பள்ளி வகுப்பறையில் சோகத்துடன் காணப்பட்டார்
  • போலீசார் விசாரணை நடத்தி சிறுமியின் தாயாரை கைது செய்தனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி பள்ளி வகுப்பறையில் சோகத்துடன் காணப்பட்டார். ஆசிரியைகள் அவருக்கு கவுன்சிலிங் வழங்கியபோது தனக்கு தாயாரின் நண்பர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விசாரணை நடத்தி சிறுமியின் தாயாரை கைது செய்தனர்.

சிறுமிக்கு நடந்த பாலியல் தொல்லையை தடுக்க தவறியதாக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

Similar News