- பணம் என்கிற ஒரே பண்டத்தால் மட்டுமே பெண்ணின் தேவைகள் பூர்த்தியாகி விடுவதில்லை.
- பெண்ணின் மனதை மகிழ்விக்கும் காரணிகளின் பணமும் ஒன்று.
நிம்மதியும், மகிழ்ச்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். மகிழ்ச்சி காணாமல் போகும் போது நிம்மதியும் காணாமல் போகிறது.
காற்று, நீர், உணவு, உறக்கம், பாலின்பம் இவை தான் ஒரு மனித உடலுக்கான அடிப்படைத் தேவைகள். இவற்றில் ஒன்றில்லையென்றாலும் உடல் துன்பப்படுவது உறுதி. அந்த உடற்துன்பம் காரணமாக மனநலமும் கெடுவது உறுதி.
நடைபாதையில் வசிப்பவனின் மனைவியும் சரி. அரசாங்க அதிகாரியின் மனைவியும் சரி. நட்சத்திர விடுதி போன்ற மாளிகையில் வசிப்பவனின் மனைவியும் சரி. மகா கோடீஸ்வரனின் மனைவியும் சரி. தங்கள் கணவனுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் வழங்க தயங்குகிறார்கள்.
மனித உடலின் அடிப்படைப் பசியான காமம் தணிக்கப்படாத போது ஆழ்மனதில் ஏக்கம் பிறக்கிறது. ஏக்கம் பூர்த்தியடையாத போது ஏமாற்றம் உருவாகிறது. தொடர் ஏமாற்றம் மனநிலையை விரக்தியடையச் செய்கிறது. நாள்பட்ட விரக்தியே வெறுப்பாக மாறுகிறது. இந்த வெறுப்பு தான் மன நிம்மதியை வேரறுத்து, மகிழ்ச்சியற்ற மனநிலைக்கு உந்திச் செல்லும். மனைவியின் மனநலத்தை பொறுத்தே கணவனின் மகிழ்ச்சியும், அவன் பெறக்கூடிய வெற்றியின் அளவும், சமூக மதிப்பும், அவனுடைய ஆயுட்காலமும், குழந்தைகளின் எதிர்காலமும், குடும்பத்தின் தரமும் தீர்மானிக்கப்படுகின்றன.
குடும்ப வாழ்க்கையில் நிகழும் அவலங்களுக்காக கூறப்படுகின்ற காரணங்கள் அனைத்துமே சாக்குப் போக்குகள். உண்மையான காரணம் பாலின்ப ஆற்றாமை. தாம்பத்ய வாழ்வில் காமம் தணிக்கப்படாத போது, பாலின்ப ஆற்றாமை பெண்ணின் உடலில் உருவாகிறது. இந்த ஆற்றாமை நுண்ணிய அளவிலான மன நோயாக மாறுகிறது. அந்த மனநோயின் விளைவாக அப்பாவி பெண் கூட பிடாரியாக மாற வாய்ப்புண்டு. அதன்பின் தன்னுணர்வற்ற நிலையில் கணவனை சகட்டு மேனிக்கு வதைக்கத் தொடங்குகிறாள்.
பணம் என்கிற ஒரே பண்டத்தால் மட்டுமே பெண்ணின் தேவைகள் பூர்த்தியாகி விடுவதில்லை. பெண்ணின் மனதை மகிழ்விக்கும் காரணிகளின் பணமும் ஒன்று. மற்றபடி, பணம் மட்டுமே பாலின்பப் பஞ்சத்தால் ஏற்படும் மன வக்கிரங்களைப் போக்கி விட முடியாது. பாலின்பத்துக்கு மாற்றுப் பொருளாக பணத்தைப் பயன்படுத்த முடியாது. பணம் அத்தகைய சக்தி வாய்ந்த மந்திரக்கோல் அல்ல.
ஆகவே காமத்தின் புனிதத்தை புரிந்து கொள்ள முடியாத கணவனால் மனைவிக்குரிய இன்பங்களை நிச்சயம் வழங்க முடியாது. பாலின்பங்களை வழங்காத வரை மனைவியின் மனம் மலர முடியாது. மனைவியின் மனம் மலராத வரை, குடும்ப விவகாரச்சண்டைகள் முடிவிற்கே வராது. குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிரந்தரமாகக் குடியேற முடியாது.
படித்ததில் பிடித்தது