கதம்பம்

கடவுள் ரகசியம்...

Published On 2022-08-05 10:45 GMT   |   Update On 2022-08-05 10:45 GMT
  • ஆண்டவன் என்றால் விரிந்தவன், எல்லையில்லாதவன் என்று பொருள்.
  • இந்த உலகம் முழுவதும் விரிந்து பரந்து ஒவ்வொரு பொருளிலும் நீக்கமற நிறைந்து இருப்பவன்.

பிரபஞ்ச ரகசியங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு இருக்கும் கடவுளின் பல்வேறு பெயர்களுக்கு உள்ளே எவ்வளவோ அதி சூட்சும ரகசியங்கள் மறைந்து இருக்கின்றன.

கடவுளை நாம் 1. ஆதி 2. பகவன் 3. ஆண்டவன் 4. கடவுள் 5. இறைவன் 6. தெய்வம் 7. அநாதி 8. பிரம்மம் 9. பரம் 10. பூரணம் என பலவாறு அழைக்கிறோம். இந்த பெயர்களுக்குள் மறைந்திருக்கும் சூட்சுமமான ரகசியங்கள் அர்த்தங்கள் என்ன என்பதையும் பார்ப்போம்....

ஆதி : ஆதி என்றால் முதல் நிலை, மூல நிலை, இருப்பு நிலை என்று பொருள். இந்த உலகம் அனைத்தும் தோன்றுவதற்கு முன்பு இருந்த நிலை. ஆதலால் முதல்நிலை என்றும், இந்த உலகம் அனைத்தும் தோன்றுவதற்கு மூல காரணமாக இருப்பதால் மூலநிலை என்றும், இந்த உலகம் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்து ஆண்டு கொண்டு இருப்பதால் இருப்புநிலை என்றும், இந்த மூன்று அர்த்தங்களையும் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு, இந்த உலகம் அனைத்தும் தோன்றுவதற்கு முன்பு இருந்த காரணத்தினால் ஆதி என்றும் அழைக்கப்படுகிறது.

பகவன்: இலகு, பகு என்று இரண்டு வடமொழிச் சொற்கள் உள்ளன.

இலகு - என்றால், சிறிய ,எளிய என்று பொருள்.

பகு - என்றால், பெரிய, மதிப்புமிக்க என்று பொருள்.

பகு + அவன் = பகவன். அதாவது பகவன் என்றால் பெரியவன், மதிப்பு மிக்கவன் என்று பொருள். பகவன் என்பது இறைவன் மிகப்பெரியவன் என்பதைக் குறிக்கிறது.

குடும்ப அளவில் பெரியவன் என்றால் எல்லோரையும் விட மூத்தவன் என்று பொருள். உலக அளவில் பெரியவன் என்றால் உலகில் உள்ள அனைத்திற்கும் மூத்தவன், மூலநிலை என்று பொருள். அந்த மூலநிலையைத் தான் பகவன் என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம்.

ஆண்டவன் : ஆண்டு + அவன் = ஆண்டவன்.

ஈண்டு என்றால் இங்கே குறிப்பிட்ட எல்லைக்குள் என்று பொருள்.

ஆண்டு என்றால் விரிந்த எல்லையில்லாத என்று பொருள்.

ஆண்டவன் என்றால் விரிந்தவன், எல்லையில்லாதவன் என்று பொருள். அதாவது இந்த உலகம் முழுவதும் விரிந்து பரந்து ஒவ்வொரு பொருளிலும் நீக்கமற நிறைந்து இருப்பவன்.

ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடக்க முடியாதவன்.. ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் குறிப்பிட்டுக் காட்ட முடியாதவன்.. ஒரு குறிப்பிட்ட உருவத்திற்குள் அடக்கி வார்த்தைகளில் சொல்ல முடியாதவன் என்று பொருள்.

கடவுள்: உயிரின் படர்க்கை நிலையான மனம், உயிராக ஒடுங்கி, உயிரே பரமாக, கடவுளாக மாறுவதைத் தான் கடவுள் என்ற சொல் குறிப்பிடுகிறது.

கட+வுள் = கடவுள் அதாவது கடந்து கொண்டே உள்ளே செல்.

மனதை அடக்கிக் கொண்டே உள்ளே சென்றால் மனதின் அடித்தளமாக இருப்பு நிலையாக உள்ள இறைவனைக் கண்டு கொள்ளலாம் என்பதே கட + வுள் = #கடவுள் என்பதாகும்.

இறைவன்: இறைவன் என்றால் அரசன், தலைவன், அனைத்தையும் தன்னுள் அடக்கி ஆள்பவன் என்று பொருள். அதாவது உலகில் உள்ள அனைத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்து இயக்க நிலை மாறாமல், இயக்க விதிப்படி ஆண்டு கொண்டிருப்பவன் என்று பொருள்.

தெய்வம் : உலகில் இரண்டு நிலைகள் தான் உள்ளது. அ) நிகழ்ச்சி நிலை... ஆ)பொருள் நிலை.

எது அசைந்து கொண்டிருக்கிறதோ எது தன்னுடைய நிலையில் மாற்றம் பெற்றுக் கொண்டிருக்கிறதோ அது நிகழ்ச்சி நிலை எனப்படும்.

அசைவையும் மாற்றத்தையும் கழித்து விட்டால் எது எஞ்சி இருப்பாக இருக்கிறதோ அது தான் பொருள் நிலை.

உடலை நெருப்பில் போட்டால் சாம்பலாகிப் போகிறது... சாம்பல் அணுவாகிப் போகிறது. அதைப் போல எல்லாப் பொருட்களும் ஆராய்ச்சிக்கு அகப்படாமல் அணு அணுவாகத் தேய்ந்து சுத்த வெளியில் கலந்து ஒன்றுடன் ஒன்றாகி நின்று விடுகிறது. தெய்வம் என்ற சொல்லே மருவி தெய்வம் என்று ஆயிற்று.

அநாதி: அநாதி என்றால் ஆதாரம் இல்லாதது என்று பொருள்.

புத்தகம் மேசை மீது இருக்கிறது.. மேசை பூமி மீது இருக்கிறது...பூமி வெட்ட வெளியில் இருக்கிறது.

புத்தகத்திற்கு மேசை ஆதாரம்... மேசைக்கு பூமி ஆதாரம்... பூமிக்கு வெட்ட வெளி ஆதாரம்...வெட்ட வெளிக்கு ஆதாரம் என்ற ஒன்றும் இல்லாததால் அது அநாதி ஆயிற்று.

அநாதை என்ற சொல்லில் இருந்து தான் அநாதி என்ற சொல்லே வந்தது. அநாதை என்றால் ஒரு பொருள் உருவாக காரணமானவர் யார் ? என்று தெரியவில்லை என்று பொருள்.

கடவுளை யார் உருவாக்கினார்கள்? என்று தெரியாத காரணத்தினால் அதாவது தாய், தந்தை இல்லாத காரணத்தினால் கடவுளை அநாதி என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர்....

பிரம்மம்: பிரம்மம் என்றால் நித்தியமாயிருக்கின்ற என்று பொருள். அதாவது அழிவில்லாதது என்று அர்த்தம்.

Tags:    

Similar News