கதம்பம்

இசையால் வசமாக்கலாம்

Published On 2022-12-14 10:27 GMT   |   Update On 2022-12-14 10:27 GMT
  • கனமான பாறை அந்தரத்தில் மிதக்க தொடங்கியது.
  • குன்றின் கீழ் இருந்து 250 மீட்டர் தொலைவு அந்தரத்தில் மிதந்தபடி குன்றின் உச்சியை அடைந்தது.

இந்த பிரபஞ்சமே ஒரு கோணத்தில் பார்க்கும்போது அனைத்துமே அதிர்வலைகளாக தான் உள்ளது. அதற்கு ஒரு எடுத்துகாட்டு பின்வரும் சம்பவம்..

1939 ஆம் ஆண்டு சுவிடன் நாட்டை சேர்ந்த டாக்டர் ஜர்ல் என்பவர் திபெத்தில் உள்ள துறவிகள் மடலாயத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார்.

அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு சென்ற அவர் சில நாள்கள் அங்கேயே தங்கி இருந்தார். ஒருநாள் துறவிகள் புது மடத்தின் கட்டுமானம் நடைபெறும் இடத்திற்கு அவரையும் அழைத்து சென்றனர்.

உடன் வந்த துறவிகளோ கையில் பறை, நீள்குழல் போன்ற இசைகருவிகளை எடுத்து வந்தனர். டாக்டர் ஜர்ல்லோ, கட்டுமான பணிகளுக்கும் இசை கருவிகளுக்கும் என்ன சம்மந்தம் என குழம்பியிருந்தார்.

துறவிகளோ கொண்டுவந்த இசைகருவிகளை தாங்கள் தூக்க வேண்டிய பாறைகளில் இருந்தது 63 மீட்டர் தொலைவிலும் ஒரு குறிப்பிட்ட கோணத்திலும் வரிசைபடுத்தினர். அதில் மொத்தம் 19 கருவிகள். அதில் 13 பறைகள் மற்றும் மற்ற பிறஇசைகருவிகளும் அடக்கம். பிறகு வாத்தியங்களை இசைக்க தொடங்கினர். அதில் இருந்து 6 விதமான எக்காளம் (ஒலி) எழுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து துறவிகள் ஒருவித ஒலி அமைப்புடன் கூடிய வழிபாடுகளையும் நடத்தினர்.

அப்போது கனமான பாறை அந்தரத்தில் மிதக்க தொடங்கியது. குன்றின் கீழ் இருந்து 250 மீட்டர் தொலைவு அந்தரத்தில் மிதந்தபடி குன்றின் உச்சியை அடைந்தது. இது போன்று ஒருமணிநேரத்தில் 5-6 பாறைகளை அவர்கள் இடம்பெயர்த்தி கட்டுமான பணிகளை செய்தனர்.

இதை பார்த்த டாக்டர் ஜர்ல் அதிசயத்து போனார். அவரது கண்களை அவராலே நம்பமுடியவில்லை, பிறகு அவர் இதனை படமாக்கி கொண்டு கிளம்பினார்.

அப்படியென்றல் யோசித்து பாருங்கள்.. உலகில் இன்றும் காணப்படும் மிகப்பெரிய அளவிலான பழங்கால கட்டிடங்கள் எப்படி கட்டப்பட்டது என புரியும்.

அறிவியலில் இப்போது சத்தத்தை கொண்டு சிறிய அளவிலான கற்களை மிதக்கவைக்க முடியும் என நிருபித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிர்வலைகளை உருவாக்குவதன் மூலம் அனைத்தையும் சாதிக்கமுடியும்.

-பாலா

Tags:    

Similar News

இலவசம்